Friday, 17th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

டிசம்பர் 22, 2022 08:05

மல்லசமுத்திரம், டிச. 23– ஈச்சங்காடு கிராமத்தில், கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடந்தது. மல்லசமுத்திரம் அருகேயுள்ள, கொளங்கொண்டை ஊராட்சி, ஈச்சங்காடு பகுதியில் நடந்த சிறப்பு கால்நடை விழிப்புணர்வு முகாமில், கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், குடல்புழு  நீக்குதல், ஆண்மை நீக்குதல், செயற்கை கருவூட்டம் செய்தல், மலடுநீக்கசிகிச்சை செய்தல், சிறு அறுவை சிகிச்சைகள், தேவைக்கேற்பநோய்தடுப்பு மருந்துகள் அளித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

சிறந்த மூன்று கன்றுகுட்டிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. சிறப்பாக கால்நடைகள் கையாளும் மூன்று விவசாயிகளுக்கு சிறந்த நடைமுறை விருதுகள் வழங்கப்பட்டது. 100 மாடுகளுக்கு அம்மை தடுப்பூசி போடப்பட்டது. 70 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்பெற்றனர். கால்நடைதுறை மண்டல இணைஇயக்குனர் பாஸ்கர், மருத்துவர்கள் ஸ்ரீதர், சண்முகம், ஆய்வாளர் கோகிலா, பராமரிப்பு உதவியாளர் இளங்கோ, ஊராட்சிமன்ற தலைவர் குழந்தைவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

தலைப்புச்செய்திகள்